Monday 12 August 2013

முப்பதை கடந்தவுடன்...!!


விருப்பு வெருப்புடன்
வாழ பழகிவிட்டது...

மனைவியால்
சகித்துக்கொள்ள முடியவில்லை
சில மௌனங்களை....

புரியாது அவளுக்கு....

அவளும் சரியாவாள்
முப்பதை தாண்டும் பொழுது..

சில நேரங்களில் தோன்றும்
தோள் கொடுக்க
ஆள் இல்லையே
என்று.....???

நீ எத்தனை பேருக்கு
கொடுத்தாய்
உனக்கு கொடுக்க..??

ஏதோ சில சௌரியங்கள்
சில அசௌரியங்கள்
நண்பர்களாலும்
உறவினர்களாலும்
அதனால்
அவர்கள் அனைவரையும்
தவிர்க்க இயலாது...

எவனோ ஒருவனுக்கு
நீயும் அப்படியே...

சில நேரத்து
சோகங்கள்....
இதையும் கடப்போம்
என்று உள்ளிருந்து
ஒரு குரல்....

ஏதோ ஒரு
குருட்டு நம்பிக்கை
நாமும் ஜெயிப்போம்
என்று...

வாழ்க்கை
சில நேரம் தத்துவமாய்
சில நேரம் சுத்தமாய்
விளக்கம் புரியாத
பக்கங்களாய்....

ஏதோ ஒன்றைத்தேடி
ஏதோ ஒன்று
கிடைக்கும் பொழுது....

சந்தோஷமோ..
துக்கமோ அதை கூட
பகிர்ந்து கொள்ள
நேரமில்லை இன்று
மனிதனுக்கு....

வாழ்வுடன்
தொடர்புடைய
சில சந்தோஷங்களுக்கு
நாம் இடம் கொடுப்பதே
இல்லை....
அதையும் மீறிய
சில சந்தோஷங்கள்
சங்கடங்களுடனே
முடிகிறது.....

வாழ்க்கையின்
அர்த்தம் சில
நேரங்களில்
குறைய தொடங்குகிறது

நாம் வாழ்க்கையை
தேட தொடங்கும் பொழுது...







-க.சி.வேலன்-




No comments:

Post a Comment