Monday 20 June 2011

காதல்...

தோல்விகள்

அதிகம் இல்லாத

வாழ்க்கை


வெற்றியும்

அதிகம்

வேண்டாம்


இரண்டுக்கும்

இடம் கொடுக்க

வேண்டாம்


மேடுகள்

கால் தடுக்கும்


பள்ளங்கள்

கால் வழுக்கும்


சமதரை

சம்மதம்


எப்பொழுதும்

சிரிக்கின்ற

உதடுகள் வேண்டாம்


துன்பத்திலிருப்பவன்

காயப்படுவான்


எப்பொழுதும்

முறைக்கின்ற

கண்களும் வேண்டாம்


நேசிப்பவர்கள்

பலர் எதிரியாவர்


காதல் இல்லாத

வாழ்க்கை

வேண்டும்


அதற்கு

கடவுளைதான்

கேட்க வேண்டும்


கடவுள்

எங்கிருப்பார்..??

ம்..ம்..ம்..ம்..

காதலில்….!!!!


பிறகு

எப்படி..???

காதலித்து

பின் சொல்…


எதை…???


காதல்

வேண்டாம்

என்று கடவுளிடமா..?


இல்லை...


காதலை

காதலியிடமா..?